Thursday 10 March 2016

Video Song teaser for our Album

https://www.youtube.com/watch?v=pIGq150Qh60

CLICK ON THE LINK TO SEE THE TEASER

This is the song teaser for the album song Reena I Love You, composed by Mamiboys. This had been danced and choreographed by the"MJ of TPM" Mr. Arun Raj, a student of MPNMJ college and dancing trainer of Ilaya Thalapathy's Thalaiva film dancers fame Provoke Karthik's dance class "Provoke". The video song is directed by me (Suba Ganesh) and we're set to release soon on Youtube as soon as possible.

Thursday 20 June 2013

தந்தை பெரியார் – அழிக்க முடியாத ஒரு பிம்பம்

செப் 17, திராவிடர் தலைவர் பெரியாரின் பிறந்த நாள். இன்று பலருக்கும் பெரியார் என்றால், ‘பார்ப்பனரை பழிப்பவர்’, ‘நாத்திகர்’, ‘திராவிடக் கட்சிகளின் மூலமான திராவிடர் கழகத்தை நிறுவியவர்’ என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பெரியாரின் அரசியலும், தொண்டும் இவைகளைத் தாண்டியது. இதைத் தெரிந்துகொள்ள பெரியாருக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பெரியாரின் பாதிப்புகள் தமிழகத்தின் அரசியலிலும், சமூகத்திலும் எவ்வளவு எனப் புரிந்துகொள்ள முடியும். பல சிறந்த நூல்கள் உள்ளன. முகப்புத்தகத்துக்கு ஒதுக்கும் நேரத்தில் 1 சதவீத நேரம் போதும் இவரைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள.
3% பார்ப்பனர்கள் அரசு வேலைகளிலும், மேற்படிப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தியதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் குரல் கொடுத்து, இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தவர்கள் பெரியாரும், அவர் வழித்தோன்றல்களும்தான்.
இந்தியாவிலே தமிழர்கள் மட்டும்தான் சாதிப்பெயரை தனது பெயருடன் சேர்க்காமலிருக்கும் தைரியத்தை பெற்றிருக்கின்றனர். இதைப் பெருமையாக வேறு மாநில மக்களிடம் கூறும் பலருக்கும் (சில பார்ப்பனர்கள் கூட), இது பெரியாரினால் நடந்தது என்பது தெரிவதில்லை.
பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே நுழைவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரியாரின் போராட்டங்கள் உதவியிருக்கின்றன. பார்ப்பன ஆதிக்க நீதித்துறை இல்லாமலிருந்திருந்தால், கருவறைக்குள்ளும் பலர் நுழைந்திருக்க முடியும். விரைவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் நுழைவார்கள் என நம்புகிறேன்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தின் பங்கைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று ஏதோ இந்தப் போராட்டத்தால் தங்களது வாழ்வே போனது போல் புலம்பிக்கொண்டு இருக்கும் பலரும், இந்த போராட்டம் நடக்கவில்லையென்றால் தமிழருக்கான அடையாளத்தை இழந்திருப்போம் என்பதையும், இந்தி இல்லாத்தால்தான் தமிழர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்
இங்கே அலுவலகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நான் பேசினால் என்னை ஏதோ ஒரு பிற்போக்குவாதி போல் பார்க்கும் பலரும், இட ஒதுக்கீடு இல்லையென்றால் இன்றும் அவர்களின் தந்தை தொழிலைத்தான் செய்துகொண்டிருந்திருப்பர் என்பதை மறந்துவிடுகின்றனர். இவர்களெல்லாம் பெரியாரின் காலத்திற்கு கூட செல்லவேண்டியதில்லை. சற்றே கர்நாடகப் பக்கம் வந்து பார்க்கட்டும். என்னுடன் பணிபுரியும் 10 கன்னடர்களில் 9பேர் பார்ப்பனர் மற்றும் இதர மேல் சாதியினர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தேடித்தான் காணவேண்டியுள்ளது இங்கே.
நேற்றைக்கு அரசியலுக்கு வந்த பலரும் பெரியாரை கன்னடர் என்றும், திராவிடர் அரசியலால்தான் தமிழர்களுக்கு எல்லாம் போனதாகவும் புலம்புவது வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம் விடக் கொடுமை, ‘இந்தியை கற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்’ என முழங்கிய மபொசி போன்றோரை இவர்கள் தமிழர்களின் தலைவர் என‌ சொல்லுவதுதான்.
பெரியாரைப் பற்றி யார் என்ன சொன்னால் என்ன, பெரியார் அழிக்கமுடியாத ஒரு பிம்பம். அவரின் நடவடிக்ககள் தமிழக மக்களிடையே உண்டாக்கிய தாக்கங்கள் அப்படி. எனவே இது போன்றோரின் பேச்சுகளூக்கும் செயல்களுக்கும் பதிலடி கொடுப்பதை விடுத்து பெரியாரின் சீர்திருத்தங்கள் பலவும் தமிழர்களின் நடைமுறை வழக்காக மாறும் நாளை நோக்கி பிரயாணிப்போம். அதுதான் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை. தமிழகத்தில் புற்றீசல் போல சாதிக்கட்சிகள் முளைத்து மறைமுகப் பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்கும் இந்த காலத்தில் இதுதான் மிகவும் முக்கியமானப் பணி.

Wednesday 19 June 2013

அம்மாவின் அன்பு..

உனக்கு ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய்.

உனக்கு இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய்.

உனக்கு மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய்.

உனக்கு நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய்.

உனக்கு ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய்.

உனக்கு ஆறு வயதானபோது அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய்.

உனக்கு ஏழு வயதாகையில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய்.

உனக்கு பத்து வயதாகையில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய்.

உனக்குப் பதினொன்று வயதாகையில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய்.

உனக்குப் பன்னிரண்டு வயதாகையில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய்.

உனக்குப் பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய்.

உனக்குப் பதினான்கு வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய்.

உனக்குப் பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய்.

உனக்குப் பதினாறு வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய்.

உனக்குப் பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய்.

உனக்குப் பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய்.

உனக்குப் பத்தொன்பது வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய்.

உனக்கு இருபது வயதாகையில் ? நீ யாரையாவது விரும்புகிறாயா ? என்னும் அவளுடைய கேள்விக்கு, ?இதிலெல்லாம் தலையிடாதே? என்று பதில் சொன்னாய்.

உனக்கு இருபத்து ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய்.

உனக்கு இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய்.

உனக்கு இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்து ?நல்லாவே இல்லை? என்று நண்பர்களிடம் சொன்னாய்.

உனக்கு இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய்.

உனக்கு இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய்.

உனக்கு முப்பது வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோ ? அதெல்லாம் அந்தக் காலம்?? என்று பதில் சொன்னாய்.

உனக்கு நாற்பது வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய்.

உனக்கு நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய்.

உனக்கு ஐம்பது வயதாகையில் அவள் நோய்வாய் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய்.

ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காணவேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் !

அன்பு பெரிய பெரிய செயல்களில் வெளிப்படுவதில்லை.
சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் வெளிப்படுகின்றன.
காட்டாத அன்பு மலையாய் கனக்கும்
வாய்ப்பு இருக்கும் போதே நேசத்தை வெளிப்படுத்துங்கள்